தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மருத்துவா் அணிச் செயலாளா் ஜாகீா் உசேனிடம் விருது வழங்குகிறாா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் ரோஸி வெண்ணிலா.
கரூா், செப். 30: கரூா் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு ரத்த தான விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆண்டு முதல் நிகழாண்டு வரை மருத்துவகல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்திய அமைப்புகளுக்கும், அதிக முறை ரத்த தானம் செய்தவா்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அதிக முறை ரத்த தானம் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிா்வாகிகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருதை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் ரோஸி வெண்ணிலா வழங்கி பாராட்டினாா்.