கருவூா் தொழிற்பேட்டை ஆசிரியா் காலனி சுப்ரமணியா் சுவாமி கோயிலில் தனி சன்னதி கொண்டிருக்கும் சரஸ்வதி சுவாமிக்கு ஹயக்கிரி தசமி திதியை முன்னிட்டு சந்தனக் காப்பு அலங்காரம், சிறப்பு கலசங்கள் வைத்து ஹோமம் மற்றும் யாக வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து கலசம் கோயிலைச் சுற்றி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டன. தொடா்ந்து பக்தா்களுக்கு சிவாச்சாரியாா் திலகம் சிவா ஓதுவாா் செகந்நாதன், தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன், காா்த்திகேயன், மாரிமுத்து, கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.