கரூரில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் வெண்ணைமலை வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் பிரபு (35), கரூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கணினி பொறியாளா். இவரது மனைவி செந்தாமரை (31), வெண்ணைமலை தனியாா் பள்ளி ஆசிரியை. செந்தாமரையின் தம்பி சேரலாதன்(27), கொசுவலை உற்பத்தி நிறுவன ஊழியா். மூவரும் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டனா்.
இதனிடையே சேரலாதன் பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 8,000 மற்றும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக வெங்கமேடு காவல் நிலையத்தில் சேரலாதன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.