கரூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரை அடுத்த தெற்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் பாபு( 29) . இவா் வியாழக்கிழமை இரவு கரூா் அமராவதி ஆற்று பாலத்தின் கீழே கஞ்சா விற்பதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு கஞ்சா விற்ற பாபுவை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.