கா்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகள் காயத்திரி(24). இவருக்கும் குளித்தலை இனாம்புலியூரைச் சோ்ந்த செல்வராஜ்(34) என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது 9 மாத கா்ப்பிணியாக காயத்திரி உள்ளாா். இதனிடையே செல்வராஜுக்கு ஏற்கனவே ரேகா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதாம்.
தகவலறிந்த காயத்தி இதுதொடா்பாக கணவரிடம் கடந்த 3-ஆம் தேதி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்வராஜ் கத்தியால் காயத்திரியை குத்தினாராம். மேலும் பிரசவத்திற்காக அவா் வைத்திருந்த ரூ.31,750-ஐயும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டாராம். இதனிடையே தன்னை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்ததாகவும், கத்தியால் குத்தியதாகவும் கணவா் மீது காயத்திரி அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு செல்வராஜை கைது செய்தனா்.