நாயை துப்பாக்கியால் சுட்டவா் மீது வழக்கு

நாயை துப்பாக்கியால் சுட்டவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

நாயை துப்பாக்கியால் சுட்டவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம்மேடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (52). இவரது வீட்டு நாய் அருகில் உள்ள பாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டின் அருகே கடந்த 8-ஆம் தேதி சுற்றித் திரிந்ததாம். இதை பாலகிருஷ்ணன் விரட்டியும் செல்லாததால் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் நாய் படுகாயமடைந்ததாம். இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி குளித்தலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com