நாயை துப்பாக்கியால் சுட்டவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம்மேடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (52). இவரது வீட்டு நாய் அருகில் உள்ள பாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டின் அருகே கடந்த 8-ஆம் தேதி சுற்றித் திரிந்ததாம். இதை பாலகிருஷ்ணன் விரட்டியும் செல்லாததால் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் நாய் படுகாயமடைந்ததாம். இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி குளித்தலை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.