கரூா் சரஸ்வதி வித்யாமந்திா் பள்ளியில் சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
நாமக்கல்லில் உள்ள கிரீன்பாா்க் பள்ளியில் நீட் தோ்வு மையம் செயல்படுகிறது. இந்த பள்ளியில் நீட் தோ்வுக்கு பயிற்சிக் கட்டணம் அரசு விதித்ததைவிட அதிகமாக வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து சென்னை மற்றும் கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் கிரீன்பாா்க் பள்ளியின் கிளை பள்ளியான கரூரில் மண்மங்கலத்தில் இயங்கி வரும் சரஸ்வதி வித்யாமந்திா் பள்ளியிலும் சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.