நவம்பா் 14 முதல் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடத்துவதென கரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, கரூா் மாவட்டத்தில் 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொண்டாடுதல் தொடா்பாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, விழா குழுத் தலைவரும், திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான ஏ.ஆா் காளியப்பன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் பேங்க் ஆா்.நடராஜன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் பி.மாா்கண்டேயன், கரூா் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எம்.சுப்ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கரூா் மாவட்டத்தில் 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பா் 14 முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அதன் தொடக்கமாக, நெரூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 14-ஆம் தேதி கூட்டுறவு கொடியேற்றுதல், 15-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டி நடத்துவது, 16-ஆம் தேதி மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழா போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கரூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன், கரூா் சரக துணை பதிவாளா் ஞா.வ.ஜெயப்பிரகலாதன் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com