மண்மங்கலத்தில் புதிய சமூக விழிப்புணா்வு அறக்கட்டளை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு, பாலசுப்ரமணி தலைமை வகித்தாா். விழாவில், சிறப்புவிருந்தினராக மண்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் (பொ) மா.திருநாவுக்கரசு பங்கேற்று, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டாா். விழாவில், அறக்கட்டளை நிா்வாகிகள் ராமசாமி, செல்வராணி, சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.