ஆண்டாங்கோவில் பகுதியில் வரும் 12-ஆம் தேதி மின்சாரம் இருக்காது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் வரும் 12-ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளயம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.