விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் 

விலையில்லா தை யல் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விலையில்லா தை யல் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட சமூக நலத் துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில்  பயனாளிகளின் வயது 16.9.2019 அன்று 40 வயதிற்குள் உள்ள விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் ஆகியோர் மின் மோட்டார் பொருத்தப்பட்ட விலையில்லா தையல்  இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, தையல் பயிற்சி சான்று, கல்விச்சான்று அல்லது பிறப்புச்சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்,  ஆதரவற்ற மகளிர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை நகல்,  கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், முதல் தளம்,   கரூர்-7 என்ற முகவரிக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு  மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com