கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (13-ம்தேதி) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழக அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து இயக்கம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும்.