பானிபூரி கடையில் தகராறு: இளைஞர் கைது

கரூரில் பானிபூரி கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.


கரூரில் பானிபூரி கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
 கரூர் காசிம் தெருவைச் சேர்ந்தவர் பானுபிரதாப்சிங்(39). இவர் கரூர் ஜவஹர் பஜாரில் மாலை நேரங்களில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிக்கிழமை இரவு பசுபதிபாளையம் ராமானூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார்(27) என்பவர் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் தரமறுத்தாராம். இதை தட்டிக்கேட்ட பானுபிரதாப்சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com