வேலாயுதம்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயமடைந்தார்.
கரூர் அடுத்த மண்மங்கலம் பூலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி கற்பகத்துடன் (55) சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ராஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து கார் ஓட்டுநரான கரூர் புகழூர் அடுத்த நடையனூரைச் சேர்ந்த பார்த்தீபன் (47) என்பவரை தேடி வருகின்றனர்.