தாந்தோணிமலையில் 24ஆம் தேதி மின்நிறுத்தம்

தாந்தோணிமலை பகுதியில் வரும் 24ஆம் தேதி மின்நிறுத்தம் நடைபெற உள்ளது.


தாந்தோணிமலை பகுதியில் வரும் 24ஆம் தேதி மின்நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கரூர் மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில்
வரும் 24ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் நடைபெறும் பகுதிகளான தாந்தோணிமலை,  சுங்ககேட்,  மணவாடி,  காந்திகிராமம்,  கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி,  பாகநத்தம்,  பத்தாம்பட்டி,  செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com