விபத்தில் மூதாட்டி பலி

அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூரில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க  மூதாட்டி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த

அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூரில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க  மூதாட்டி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில் கிடந்தார். 
இதுதொடர்பாக  அப்பகுதியினர் கொடையூர் கிராம நிர்வாக அலுவலர் பிரவீண்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரவீண்குமார் அளித்த புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் மீது எந்த வாகனம் மோதியது என விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com