வாக்காளர்கள் தங்களது விவரங்களை தாங்களாகவே அறிய வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 1ஆம் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் (Electors Verification Programme) என்ற திட்டம் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின்படி வாக்காளர்கள் தாங்களாகவே, தங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கலாம்.
இத்திட்டத்தின்படி வாக்காளர்கள் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம் மற்றும் பாலினம் விவரங்களை சரிபார்க்கலாம்.
இவ்வாறு வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பதற்கு National Voters Service Portal என்ற இணையதளம், யர்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செல்லிடப்பேசி செயலி, 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணை தொடர்புகொள்ளுதல், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தை அணுகுவது, பொது இ-சேவை மையங்கள் அணுகுவது போன்ற வழிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.