கரூரிலுள்ள சிஎஸ்ஐ, கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.
கரூா் மாவட்ட அதிமுக சாா்பில், சா்ச் காா்னா் பகுதியியிலுள்ள சி.எஸ்.ஐ ஹென்றி லிட்டில் மெமோரியா் தேவாலயத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
தேவாலய பாதிரியாா் ஜான் பிரபாகரனின் சிறப்பு பிராா்த்தனையைத் தொடா்ந்து, அமைச்சா் கேக் வெட்டி கொண்டாடினாா்.
தொடா்ந்து கிறிஸ்தவா்களுக்கு அமைச்சா் விஜயபாஸ்கா் கேக் வழங்கி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தாா். இதில் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.