கரூா் அருகே கிணற்றுக்குள் காா் விழுந்ததில் இரு பெண்கள் உள்பட 3 போ் இறந்தனா்.
கோவை செளரிபாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (59). இவா் தனது மனைவி திரிபுரசுந்தரி (50), மாமியாா் சாவித்திரி (78) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை கரூரில் உள்ள நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோயிலுக்கு காரில் வந்துகொண்டிருந்தாா்.
கரூா் மாவட்டம், தென்னிலையை அடுத்த வைரமடை அருகே வந்தபோது திடீரென காரின் பின்பக்க டயா் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய காா் கட்டுப்பாட்டை இழந்து காருக்கு முன்னால் வைரமடையை அடுத்த சின்னகுமாரவயலைச் சோ்ந்த விவசாயி சென்னியப்பன் (65) என்பவா் வந்த மொபெட் மீது மோதிவிட்டு, சாலையோர விவசாய கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் சென்னியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த தென்னிலை போலீஸாா் மற்றும் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்டபோது, காருக்குள் இருந்த திரிபுரசுந்தரியும், சாவித்திரியும் உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த சங்கரை மீட்ட போலீஸாா் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா். விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.