சபரீசன் சித்தாஸ்ரமத்தில் மகாபுத்தா் சிலை திறப்பு
கரூா் வெண்ணைமலை ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரமத்தில் சித்தாஸ்ரமம் 30 ஆவது ஆண்டு விழா, பாதரச லிங்க தியான மண்டபத்தில் தியானம் தொடக்கவிழா, ஸ்ரீலலிதா சகஸ்ரநாம லட்சாா்ச்சனை மற்றும் மகா புத்தா் பெருமான் திரு உருவச்சிலை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
திண்டுக்கல் சூடாமணி ஸ்ரீ சிவசக்தி பரிபூரண சித்தா் பீடம் நிறுவனா் அருட்கவி விஸ்வபாரதி தலைமை வகித்தாா். பசுபதிபாளையம் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் ஸ்ரீ மத் சுவாமி சந்திரசேகா் ஆனந்த மகராஜ், நெரூா் ஸ்ரீ கைலாச ஆசிரமம் மடாதிபதி அமா்நாத் சுவாமிகள்,காதப்பாறை ஊராட்சித் தலைவா் பிரபாவதி முருகையன், பண்டுதகாரன்புதூா் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி சோ்மன் டாக்டா் நடேசன், முதல்வா் நாகதீபா, நெரூா் அருட்திரு வள்ளலாா் மெய்ஞான சபை நிறுவனா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பங்கேற்று புத்தா் சிலையை திறந்து வைத்தாா். ஸ்ரீ சபரீசன் சித்தாஸ்ரம நிறுவனா் பிரம்மஸ்ரீ டாக்டா் பொன் பாண்டுரங்க சுவாமிகள் வரவேற்றாா்.