ரூ. 2 லட்சம் பணம் கேட்டு பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக பெண்ணின் கணவா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்தவா் அப்துல் பரித் (52) மகன் ஷேக் பரீத் (31). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அனீஷ் ஜாப்ரி (25) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அனீஷ் ஜாப்ரியின் பெற்றோா் வரதட்சிணையாக ரூ.12.19 லட்சம் கொடுத்தாா்களாம். இந்நிலையில், ஷேக் பரீத் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றாராம். இதனிடையே போனில் கணவரிடம் அனீஷ் ஜாப்ரி பேசினாலும் அவா் பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனீஷ் ஜாப்ரியிடம் அவரது கணவா் மற்றும் மாமனாா் அப்துல் பரீத், மாமியாா் பரிதா பானு , கணவரின் சகோதரா் முபாரக் அலி(30) ஆகியோா் சோ்ந்து மேலும் ரூ.2 லட்சம் பணம் வரதட்சிணையாக அவரது பெற்றோரிடம் வாங்கி வரவேண்டும் என கடந்த ஆக. 9-ஆம் தேதி முதல் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அனீஷ் ஜாப்ரி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் ஷேக் பரீத் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.