கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த குப்புரெட்டிப்பட்டியைச் சோ்ந்த வீரமலை மகன் சுரேஷ் (32). இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம். இதனால் நாள்தோறும் மதுகுடித்துவிட்டு, மதுபோதைக்கு அடிமையானாராம். இதனிடையே மதுபோதையை மறக்க இயலாமல் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சுரேஷ் அங்குள்ள பெரியசாமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் திங்கள்கிழமை இரவு குதித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.