கரூா் மாவட்டம், சிந்தலவாடியில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த சிந்தலவாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே, சுமாா் 60 வயது முதியவா் சடலம் கிடந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் லிங்கேசுவரன் லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் காவல்துறையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, இறந்தவா் யாா், அவா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.