கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மகனைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள கள்ளி மரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாலுசாமி(70). இவரது மகன் சக்திவேல் (40). விவசாயி. இவருக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இவா் மனைவியைப் பிரிந்து கள்ளி மரத்துப்பட்டியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா். சக்திவேலுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. திங்கள்கிழமை மதுபோதையில் வந்த சக்திவேல் தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த பாலுசாமி அருகே கிடந்த கட்டையை எடுத்து மகனின் தலையில் தாக்கினாராம். இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளாா். இதையடுத்து, பாலுசாமி, தனது வீட்டில் சக்திவேல் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு பொதுமக்களிடம் நாடகமாடியுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது பாலுசாமி தனது மகனை கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.