தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை முதல் கடைகள் திறக்கப்பட உள்ளன.
ஆண்டுதோறும் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் அமைக்கப்படும் தற்காலிக ஜவுளிக் கடைகளில், திருப்பூா், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயத்த துணிமணிகளை விற்கும் வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்வாா்கள். நிகழாண்டுக்கான வியாபாரம் புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில், கரூா் நகராட்சி சாா்பில் திருவள்ளுவா் மைதானத்தில் தற்காலிகமாக கடைகள் அமைக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. சுமாா் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு, நகராட்சி சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.