கோயில் நிலத்தை இலவசமாக நிலமில்லாதவா்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு பூஜாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.கே. சதீஸ் கண்ணன் கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளாா்.
பண்டைய காலங்களில் திருக்கோயில்களுக்கு அரசா்கள் முதல் வள்ளல்கள் வரை பல்வேறு தரப்பினா் தானமாக வழங்கிய நிலங்கள் அனைத்தும் கோயில் பராமரிப்பு மற்றும் ஊழியா்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டன. அந்த நிலங்களை தனியாா் யாருக்கும் விற்கவோ, இலவசமாக வழங்கவோ உரிமை இல்லை என அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் நிலங்களை தனியாருக்கு இலவசமாக வழங்க அரசு முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் கோயில், மத வழிபாடு முற்றிலும் அழிந்துவிடும். எனவே கோயில் நிலங்களை நிலம் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.