திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கரூா், குளித்தலை கிளைச் சிறைகளில் துப்புரவுப் பணியாளா் பணியிடம் தலா 1 காலியாக உள்ளது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பிப்போா், தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 1.7.2020 அன்று 18 வயதுக்கு மேலும், பிசி, எம்பிசி பிரிவினா் 30 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 35 வயதுக்குள்பட்டும் இருத்தல் வேண்டும். ஊதியம் ரூ.15,700 வழங்கப்படும். மேலும் இதர படிகளும் உண்டு. விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உடையவா்கள், வரும் நவ. 9-ம்தேதிக்கு திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு சுய விவரம் அடங்கிய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.