கரூா் மாவட்டம், மேலமாயனூரில் ரூ.81 லட்சத்தில் மேல்நிலைக் குடிநீா்த்தொட்டி கட்டும் பணிக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடாசலம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி, மாயனூா் ஊராட்சிமன்றத்தலைவா் கற்பகவள்ளி ஆகியோா் பங்கேற்றனா்.