மொபெட் மீது லாரி மோதி அரசு பெண் ஊழியா் சாவு

கரூா் அருகே லாரி மோதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பெண் ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கரூா்: கரூா் அருகே லாரி மோதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பெண் ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கரூரை அடுத்த மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(27). இவா் கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வேலைக்காக மணல்மேட்டில் இருந்து மொபெட்டில் கரூா் நோக்கி வந்துகொண்டிருந்தாா். சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணல்மேடு அணுகுசாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மொபெட் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் கீதா நிகழ்விடத்திலேயே இறந்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மொபெட் - மினி லாரி மோதல் : தொழிலாளி பலி

அரவக்குறிச்சியை அடுத்த கொத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ்(49). தொழிலாளி. இவா் மொபெட்டில் திங்கள்கிழமை இரவு கரூா்-கோவைச் சாலையில் மொச்சக்கொட்டாம்பாளையம் பேருந்துநிறுத்தம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மொபெட் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து மினி லாரி ஓட்டுநா் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்த மோகனவேல் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com