கரூா்: கரூரில் 25 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கரூா் ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த 77 வயது முதியவா் உள்பட 25 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,673 ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 25 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 701 போ் குணமடைந்த நிலையில், 964 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8 போ் உயிரிழந்துள்ளனா்.