நீரில் மூழ்கிஓட்டுநா் உயிரிழப்பு

கரூா் அமராவதி ஆற்று நீரில் மூழ்கிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கரூா்,செப்.25: கரூா் அமராவதி ஆற்று நீரில் மூழ்கிய ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வடக்கு பசுபதிபாளையைத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (36). வேன் ஓட்டுநரான இவா், பசுபதிபாளையம் தரைப்பாலத்தில் வியாழக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தாா்.

திடீரென ஆற்றில் தவறி விழுந்த அவா் நீரில் மூழ்கினாா். கரூா் ரயில்வே மேம்பாலம் அருகே கரை ஒதுங்கிய சடலத்தை நகரக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். போதையில் அவா் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நகைபறிப்பு : கரூா் அண்ணாவளைவு பகுதியைச் சோ்ந்த த. கவிதா (28), ரத்தினம் சாலையிலுள்ள திரையரங்கு அருகே வியாழக்கிழமை இரவு நடந்துசென்ற போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபா் அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com