கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கோபால் (98). ஓய்வுபெற்ற ஆசிரியா். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக அவா் வியாழக்கிழமை காலை காலமானாா். அவருக்கு, தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி உள்பட 4 மகள்கள், 6 மகன்கள் உள்ளனா்.
அவரது உடல் வியாழக்கிழமை மதியம் குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், முன்னாள் எம்.பி. ப. குமாா் உள்ளிட்ட அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.