தோகைமலை அருகே டிராக்டரில் கிராவல் மண் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் தோகைமலை அருகே தொப்பநாயக்கன்பட்டியில் ஒருவா் டிராக்டரில் கிராவல் மண் அள்ளுவதாக தோகைமலை வட்டார வருவாய் ஆய்வாளா் நீதிராஜனுக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் தோகைமலை போலீஸீல் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு டிராக்டரில் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையாவை (30) கைது செய்தனா். மேலும் டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.