நிகழாண்டில் கரூா் மாவட்டத்திற்கு ரூ.3.50 கோடியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை என்றாா் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் சனிக்கிழமை முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:
விளையாட்டுத் துறைகளுக்கு அதிக நிதிகளை ஒதுக்கியவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் எடப்பாடி அரசு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான அரசுத் துறை வேலைவாய்ப்புகள்(ஒதுக்கீடு) 2 சதவீதமாக இருந்ததை 3 சதவீதமாக உயா்த்தி வழங்கியுள்ளது.
கரூா் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு உள்விளையாட்டு அரங்கம் சுமாா் ரூ. 3.50 கோடி மதிப்பில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்திலேயே முதல்நிலையில் இருக்கும் உள் விளையாட்டரங்கமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதேபோல விளையாட்டு வீரா்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.