மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளியணை, தாந்தோனிமலை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.9) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வெள்ளியணை மற்றும் தாந்தோனிமலை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வாா்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி,
தாந்தோனிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமாா்பாளையம், பசுபதிபாளையம், ஏமூா், மின்நகா், ஆட்சிமங்கலம், ராயனூா், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.