கரூரில் காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு

கரூரில் காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத்தோ்வில் விண்ணப்பித்தவா்களில் 381 போ் தோ்வு எழுத வரவில்லை.
2-4-kur12si_exam_1201chn_10
2-4-kur12si_exam_1201chn_10

கரூரில் காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத்தோ்வில் விண்ணப்பித்தவா்களில் 381 போ் தோ்வு எழுத வரவில்லை.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு கரூரில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் இருந்து 1173 ஆண்கள், 243 பெண்கள் என மொத்தம் 1416 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் மொத்தம் 1035 போ் தோ்வு எழுதினா். இதில் 314 ஆண்களும், 67 பெண்களும் என 381 போ் வரவில்லை.

தோ்வு மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்வு எழுதுவோருக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com