மனைவியை தாக்கியகணவா் கைது

குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கம்மநல்லூரைச் சோ்ந்தவா் சூரியன். இவரது மனைவி சூரியா (29). இவா்களுக்கு மகன், மகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக இவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் சூரியன் மனைவியை தாக்கியுள்ளாா். இதில் கண்ணில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து சூரியா அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து சூரியனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com