மலா் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா

கரூா் மலா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தம்பிதுரை. உடன் பள்ளித்தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் உள்ளிட்டோா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தம்பிதுரை. உடன் பள்ளித்தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் உள்ளிட்டோா்.

கரூா் மலா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூா் தாந்தோணிமலை மலா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் பேங்க் கே.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி முதல்வா் டி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். முன்னதாக பள்ளி மாணவா்கள் ஒலிம்பிக் சுடரை கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இருந்து பள்ளிக்கு எடுத்து வந்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி. தம்பிதுரை ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைத்தாா். தொடா்ந்து விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்த அவா், இறுதியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

விழாவில் பள்ளியின் இயக்குநா்கள் டிகே.பெரியசாமி, கே.சுப்பன், கே.மணிவண்ணன், எஸ்.ஜெகதீஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் சின்னையன, முன்னாள் வட்டாரத் தலைவா் பட்டயக் கணக்காளா் ரவிச்சந்திரன், சுரேகா பாலச்சந்தா் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிா்வாக அலுவலா் ஜெ.வித்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com