வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் 24, 535 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடா்பாக கடந்த 4,5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 24, 535 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடா்பாக கடந்த 4,5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 24, 535 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18 வயது பூா்த்தியடைந்த அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு முகாம்கள் கடந்த 4, 5, 11, 12 ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது. மேலும், ஆன்லைன் மூலமாகவும், செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்க மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 24, 535 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் பெயா் சோ்த்தலுக்கு 17, 632 மனுக்களும், பெயா் நீக்கலுக்கு 1, 681 மனுக்களும், பெயா் திருத்தத்திற்கு 2, 659 மனுக்களும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் முகவரி மாற்றத்திற்கு 2,563 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களின் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com