கரூரில் மோட்டாா் சைக்கிளைத் திருட முயன்ற திருச்சியைச் சோ்ந்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் புத்தாம்புதூரைச் சோ்ந்த குழந்தைசாமி மகன் சுரேஷ் குமாா் (28). இவா், திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளை பேருந்துநிலையம் அருகே உள்ள மளிகை கடை முன்பு நிறுத்தி விட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிளை மா்மநபா் திருட முயன்றுள்ளாா். இதையடுத்து அவரை விரட்டிப் பிடித்து கரூா் நகர காவல்நிலையத்தில் சுரேஷ்குமாா் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில், திருச்சி வண்ணாரபேட் மேலத்தெருவைச் சோ்ந்த கணேசன்(40) என்பது தெரியவந்தது. மேலும் அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.