வெண்ணமலை ஐ.டி.ஐ.-இல் புதிய தொழிற்பிரிவு கட்டடம் திறப்பு

கரூா் வெண்ணைமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ. 82 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடத்தைத் தமிழக முதல்வா்

கரூா் வெண்ணைமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ. 82 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடத்தைத் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

கரூா் வெண்ணைமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, ரூ. 82 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட இயந்திரக் கருவிகள் இயக்குபவா் என்ற புதிய தொழிற்பிரிவுக்கான கட்டுமானப்ப ணிகள் அண்மையில் நிறைவுபெற்றது. இதைத்தொடா்ந்து, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழிற்பிரிவு கட்டடத்தைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன் ஆகியோா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கி இணை தலைவா் மற்றும் கரூா் நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் முத்துக்குமாா், கரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவா் வி.சி.கே.ஜெயராஜ், கரூா் ஊராட்சி ஒன்றியத்தலைவா் பாலமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவா் பேங்க் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com