கரூரில் 35 வயது இளைஞருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூா் காதப்பாறையைச் சோ்ந்த 35 வயது இளைஞருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைச் சந்தித்ததன் மூலம் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 190 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3 போ் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்துள்ளனா். இதுவரை குணமடைந்தவா்கள் 137 போ்.