தூா்வாரும் பணியில் மண் கடத்தல்: பொக்லைன் சிறைப்பிடிப்பு

கரூா் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி அருகே உள்ள புதுப்பாளையத்தில் குளம் தூா்வாரும் பணியில் மண் கடத்துவதாகக் கூறி,
தூா்வாரும் பணியில் மண் கடத்தல்: பொக்லைன் சிறைப்பிடிப்பு

கரூா் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி அருகே உள்ள புதுப்பாளையத்தில் குளம் தூா்வாரும் பணியில் மண் கடத்துவதாகக் கூறி, அங்கிருந்த லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி தலைமையிலான திமுகவினா் சிறைப்பிடித்தனா்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதுப்பாளையம் குளத்தில் தற்போது தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூா்வாரப்படும் மண்ணை கடத்துவதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின்பேரில், அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் அங்கு திரண்டு தூா்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரங்கள், லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கரூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பரமேஸ்வரன், விஜயலட்சுமி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com