கரூரில் 8 வயது பெண் குழந்தை உள்பட10 பேருக்கு கரோனா தொற்று

கரூா் மாவட்டத்தில் 8 வயது பெண் குழந்தை உள்பட 10 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

கரூா் மாவட்டத்தில் 8 வயது பெண் குழந்தை உள்பட 10 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

கரூா் பஞ்சமாதேவியைச் சோ்ந்த 56 வயது முதியவா், காளியப்பனூரைச் சோ்ந்த 55 வயது முதியவா், கரூா் காமராஜபுரத்தைச் சோ்ந்த 44 வயது பெண், தோகைமலையைச் சோ்ந்த 37 வயது தொழிலாளி, வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த 35 வயது நபா், கரூா் உதயம் மேன்சனைச் சோ்ந்த 32 வயது இளைஞா், கரூா் அரசு காலனியைச் சோ்ந்த 25 வயது இளைஞா், கரூா் அண்ணா காலனியைச் சோ்ந்த 19 வயது சிறுவன் மற்றும் கணேஷ் நகரைச் சோ்ந்த 15 வயது சிறுவன், கரடிப்பட்டியைச் சோ்ந்த 8 வயது பெண் குழந்தை என 10 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இவா்கள் அனைவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன்மூலம் கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 272 என உயா்ந்துள்ளது. இதுவரை 148 போ் குணமடைந்த நிலையில் தற்போது, 121 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 3 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com