தேசிய விளையாட்டில் வென்றவா்கள் விளையாட்டு உபகரணம் பெற அழைப்பு

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கரூா் மாவட்ட வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கரூா் மாவட்ட வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2018 - 2019- ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வழங்கப்பட உள்ளது. இதில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ.6000- மதிப்பிலும், வெள்ளிப் பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ.4000 மதிப்பிலும், வெண்கலப்பதக்கம் பெற்றவா்களுக்கு ரூ. 2000 மதிப்பிலும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும். தகுதிபெற்ற விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சான்றிதழ்களுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் வரும் ஏப்.2 -ஆம் தேதிக்குள் நேரடியாக வந்து சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com