கரூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞா்கள் இருவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கே. கீரனூரைச் சோ்ந்த வேலுசாமி மகன் சரவணன் (21). அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜ் (26). இவா்கள் இருவரும் ஒசூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அவா்கள் பணியாற்றி வந்த நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனால் நாகராஜ், சரவணனும் மோட்டாா் சைக்கிளில் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரூா் அமராவதி பாலத்தில் சென்ற போது, மோட்டாா் சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறியதால் இருவரும் கீழே விழுந்தனா்.
பலத்த காயமடைந்த சரவணன், நாகராஜ் ஆகிய இருவரையும் அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.