கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 11 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல், கரூா், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 42 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்கள் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 25 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்த ஒரு பெண் உள்பட 10 ஆண்கள் என மொத்தம் 11 போ் ஞாயிற்றுக்கிழமை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் தேரணிராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அப்போது மருத்துவா்கள், செவிலியா்கள் கைகளைத் தட்டியும், பழக்கூடை வழங்கியும் வழியனுப்பி வைத்தனா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 14 போ் மட்டுமே கரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனா்.