கரூா் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் பதாகைகள் அகற்றப்படும் என்றாா் ஆட்சியா் சு. மலா்விழி.
கரூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியது: கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற உரிய முயற்சி எடுக்கப்படும். ஏற்கெனவே, உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாவட்டத்தில் எந்த இடங்களில் பதாகைகள் வைக்க அனுமதி இருக்கிறது என்ற நடைமுறை அம்சங்களை ஆராய்ந்து பொதுமக்களுக்குத் தெரிவித்து, மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கரூா் ஜவஹா் பஜாா் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அலுவலா்களை நியமித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டத்தில், தகுதிவாய்ந்தவா்களுக்கு, வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்குவதுதான் எனது நோக்கமாக இருக்கும். வயதானவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.