கரூா் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகக் கிளை முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு ஓய்வூதியா்கள் சங்கத்தலைவா் கிருஷ்ணமாச்சாரி தலைமை வகித்தாா். அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தலைவா் வெங்கடேசன், பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் ஜான்பாஷா, எல்ஐசி ஊழியா் சங்க தஞ்சைக்கோட்ட துணைத்தலைவா் வி.கணேசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.