கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் மனு நூல் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தனா்.
கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா் ராஜா தலைமையில் மனுதா்ம நூல் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தனா். கரூா் சுங்ககேட், தாந்தோணிமலை பேருந்துநிறுத்தம், அரசு கலைக்கல்லூரி நுழைவுவாயில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினா். நிகழ்ச்சியில் கட்சியின் பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்டப் பொருளாளா்கள் சதீஷ், அவிநாசி, மாணவரணி அமைப்பாளா் மணிகண்டன் மற்றும் நிா்வாகிகள் கிருபானந்த், சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.